மீண்டும் சர்ச்சையில் 'அயோத்தி" திரைப்படம் | எழுத்தாளர் மில்லத் அஹ்மத் பேட்டி


சென்னை: நான் எழுதிய "சிங்கப்பூரில் சரவணன்” என்ற நாவலின் கதையே அயோத்தி திரைப்படம் என்று அதன் எழுத்தாளர் மில்லத் அஹ்மத் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Press meet video link👇👇


அப்போது அவர் கூறியதாவது: நான் 2020ஆம் ஆண்டு மணிமேகலைப் பிரசுரம் மூலம் சென்னைப் புத்தகக் காட்சியில் "சிங்கப்பூரில் சரவணன்” என்ற நாவலை வெளியிட்டேன். இந்நாவல் 2016ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த நாவல்போட்டியில் வெற்றி பெற்ற கதை, மேலும் அமெரிக்கத் தமிழ் பல்கலைக்கழக விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, புதுச்சேரி படைப்பாளர் இயக்க விருது, தக்கலை இந்திய பாரம்பரிய கலை இயக்கப் பேரவை விருது, மகாகவி பாரதி கலை இலக்கிய விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளது. 

சமீபத்தில் 10.03.2023 அன்று வெளியான அயோத்தி திரைப்படம் என் நாவலின் மையக் கருத்து திருடப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எனக்கு நீதி கிடைக்க ஊடக நண்பர்களாகிய நீங்கள்தான் உதவி செய்யவேண்டும். அதற்கான ஆதாரங்களுடன் இன்று வெளியிடுவதாக கூறினார்.

****

Recent Posts