தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

பத்திரிக்கை ஊடகச் செய்தி சென்னை, டிசம்பர் 05, 2024: தமிழ்நாடு நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கம் கடந்த 10.02.2024 அன்று 5வது மாநில மாநாடு நடந்த போது மாண்புமிகு அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் மற்றும் நிலஅளவைத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர் முன்னிலையில் 28 கோரிக்கைகள் கொடுக்கப்பட்டு கோரிக்கை மாநாடாக நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் நிலஅளவைத்துறை களப் பணியாளர்கள் 1500 பேருக்கு மேலாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றிபெற செய்தனர். அம்மாநாட்டில் கொடுத்த 28 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் நிறைவேற்றித்தருவதாக மரியாதைக்குரிய நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அவர்கள் உறுதியளித்தார். Press meet Youtube Video 👇 கிட்டத்தட்ட 10 மாதங்கள் கடந்த நிலையில் நாளது தேதி வரை ஒரு கோரிக்கைகூட நிறைவேற்றித்தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். தொடர்ந்து மரியாதைக்குரிய நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அவர்களை சங்கத்தின் சார்பிலும், நாங்கள் அங்கம்வகிக்கக்கூடிய வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு சார்பிலும் சந்தித்து வாக்குறுதி அளித்த 8 கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்த...