திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு செப் 13, 14 ல் நடைபெறுகிறது

திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு 2 நாட்கள் வரும் செப்டம்பர் 13ந் தேதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் மற்றும் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜூயர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ சக்தி அம்மா, ஸ்ரீநாராயணிபீடம் ஸ்ரீபுரம், தங்க கோவில் வேலூர், அருள்திரு செந்தில்குமார் அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம், ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள் ரத்தினகிரி, ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் கலவை ஆகிய மாபெரும் ஆன்மீக மகான்கள் தலைமையில் 2 நாள் மாநாடு திருவண்ணா மலையில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் முதல் நாள் 13ந் தேதி சனிக்கிழமை காலை தமிழகம் எங்கும் இருந்து 1008 சிவாச்சாரியார்கள் பங்குபெறும் மகா சிவ பூஜை நடைபெற உள்ளது. பிறகு பிற்பகல் சுவாமி எழுந்தருள ஆன்மீக பக்தர்கள் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் பங்குபெறும் மாபெரும் ஆன்மீக கலாச்சார ஊர்வலம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலை ஆன்மீக மாகான்களின் அருளுரை மாநாட்டு திடலில் நடைபெறும். Video Coverage Link : 2ம் நாள் 14ந் தேதி (ஞாயிற்றுக்கிழ...