பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனமும் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸூம் இணைந்து 50 எழுத்தாளர்களின் (மூத்த குடிமக்கள்) 62 புத்தகங்கள் வெளியீட்டு விழா

"வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பட்டியலில், அடுத்து புத்தகச் சாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மனதில் நிறுத்தி, புத்தக வாசிப்பை மேம்படுத்த புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய பணியை செவ்வனே செய்பவர்கள் 'பேக்கிடெர்ம் டேல்ஸ்' நிறுவனத்தினர். அதன் நிறுவனர் டாக்டர் லட்சுமி பிரியாவும் இணை இயக்குனர் உமா அபர்ணா அவர்களும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் என எழுத்தாற்றல் உள்ளவர்களை புத்தகங்கள் எழுத வைத்து, இதுவரை சுமாராக 700 எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும். அதை கோர்வையாக எழுத வைத்து, அதற்கு வடிவம் தந்து, அழகிய புத்தகமாக வெளியிடும் வரை பேக்கிடெர்ம் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது. கூட்டுக் குடும்பம் இல்லாத இந்த சூழலில் மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை, அறிந்த சில தகவல்களை கதைகளாக அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று டாக்டர் லட்சுமி பிரியா எண்ணினார். அந்த...