டைடல் பூங்கா பட்டாபிராம் அருகில் ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் அறிமுகம்

சென்னை, நவம்பர் 25, 2025: சென்னை ஆவடி அடுத்த ஆயில் சேரியில் மெட்ராஸ் சிட்டி ப்ரொமோட்டர்ஸ் டாட் காம்-வின் புதிய மனை பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதி அரசர் டி.என்.வள்ளிநாயகம்; நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மனை பிரிவினை திறந்து வைத்தனர். மேலும் இந்த புதிய மனை பிரிவின் சிறப்பு அம்சங்கள் பற்றி நீதி அரசர் கூறுகையில் இவ்விடத்தில் பனை மரங்களை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது, பனை மரத்தின் நன்மைகளை இவ்விடத்தில் மனை வாங்கும் மக்களுக்கு பனை மரத்தின் நன்மைகள் புரிய வரும். இவ்விடம் பசுமை நிறைந்த இடமாக இருப்பது மனதிற்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்று கூறினார். Press meet Youtube Video 👇 அதனை தொடர்ந்து நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் கூறுகையில் இது எங்களுடைய 150வது துவக்க விழா நிகழ்ச்சியாகும். இது சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மனைப்பிரிவு அமையப்பட்டுள்ளது. 120 வீட்டு மனைகள் 700 சதுர அடிமுதல் 2000 சதுர அடி வரை விற...