நடிகை ரைஸா வில்சன் மீது 5 கோடி நஷ்ட ஈடு வழக்கு, தொடுத்தது Skin Health Foundation
சென்னை, ஏப்ரல் 27, 2021: தவறான முகப் பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி நடிகை ரைசா பொய்யான தகவலை பதிவிட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை Skin Health Foundation நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. Video👇👇 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நடிகை ரைசாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் மருத்துவர் பைரவி செந்தில் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், மருத்துவமனையின் மீது தவறான புகாரை பதிவு செய்ததால் நடிகை ரைசா தங்களுக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் விரிவான செய்திகள் : நடிகை ரைசாவை கட்டாயபடுத்தி எந்த ஒரு சிகிச்சையும் வழங்கவில்லை, மருத்துவமனை மீது பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளோம். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகை ரைசா வில்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி செந்தில், மருத்துவர் பைரவி செந்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்: நடிகை ரைசா வில்சன் எ...