Posts

Showing posts from April 4, 2026

தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோருக்கே ஓட்டு: தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு (TAEF) எச்சரிக்கை

Image
சென்னை, ஏப்ரல் 4, 2026:  தமிழக தொழில்துறையினரின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாராக உள்ள அரசியல் கட்சிகளுக்கே வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு (TAEF) மாநில பொதுச்செயலாளர் எம். ஜெயபால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். (Right) தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு (TAEF) மாநில பொதுச்செயலாளர் எம். ஜெயபால் இதுகுறித்து அவர் கூறியதாவது:  நாட்டிலேயே சுமார் 47 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ள மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், கடந்த ஒரு தசாப்தமாக போட்டி மாநிலங்களுக்கு இணையான தொழில் கொள்கைகள் அமல்படுத்தப்படாததால், உள்ளூர் தொழில்கள் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றன. தொழில்துறையின் வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக மூலப்பொருள் கிடைப்பது, மின்சாரச் செலவு குறைப்பு, போட்டித்திறன் வாய்ந்த தொழில் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் ஆதரவு ஆகிய நான்கு அம்சங்கள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார். மின்சாரம் மற்றும் மூலப்பொருள் தொடர்பான கோரிக்கைகள்: மூலப்பொருட்கள் அனைத்துத் துறைகள...

பிளாஸ்டிக் மூலப்பொருள் விலை ஏற்றம்: ஆயிரக்கணக்கான தொழில்களுக்கு அச்சுறுத்தல் – தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம் (டான்பா) எச்சரிக்கை

Image
சென்னை, ஏப்ரல் 4, 2026: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களும், பல லட்சம் தொழிலாளர்களும் கடுமையான வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாக தமிழ்நாடு–பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) தலைவர் ஜி. சங்கரன் தெரிவித்தார். சென்னை நகரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் இதை கூறினார். சர்வதேச அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ஈரான்–இஸ்ரேல் மோதல், பிளாஸ்டிக் மூலப்பொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலுக்கு பின்னர், மூலப்பொருட்களின் கிடைக்கும்வாய்ப்பு குறைந்து, சந்தையில் தீவிர பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். Press meet Youtube Video link 👇  இதன் விளைவாக, பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை கட்டுக்கடங்காத அளவில் உயர்ந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் கிலோவுக்கு ரூ.100 ஆக இருந்த விலை, தற்போது ரூ.170 வரை உயர்ந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள மூலப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, “மெட்டீரியல் இல்லை” என்ற காரணத்தா...