ஓராசிரியர் பள்ளிகளுக்கு நிதி திரட்ட பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்று கூடுகின்றனர்

ஆன்லைனில் பாடல் கச்சேரிக்கு ஏற்பாடு சென்னை: பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் 7 கலைஞர்கள் ஒன்றிணைந்து , ஒற்றை ஆசிரியர் பள்ளிகளுக்கான நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 22 முதல் ஆன்லைனில் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலை எளிதாக்க, 'ஓராசிரியர் பள்ளி' எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கத்தின் மூலம், 2006 இல் இருந்து இவ்வாறு கற்பிக்கப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் 1,057க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 31,000 குழந்தைகளுக்கு கற்பிக்கப் படுகிறது. மகளிர் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, கிராமங்களில் உள்ள தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களே ஆசிரியர்களாக இருந்து மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். பள்ளிகளில் கரும்பலகைகள், பாய்கள், சோலார் விளக்குகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் பொருத்தப்படுவ...