நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திருமாவளவன் ஆதரவு போராட்டம்


சென்னை, நவம்பர் 21, 2022: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு விடுதலைச்சிறுத்தைகள் அலுவலகத்தில் (நூறடி சாலையில் உள்ள அம்பேத்கர் திடல்) தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்களுடன் ஊடகவியலாளர்களை  சந்தித்தனர்.

Press Meet Video👇👇

இந்த கூட்டத்தில் NLC நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட உள்ள கிராம மக்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பு பேரவை தலைவர் கோபாலபுரம் P.மதியழகன், மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

அப்போது திருமாவளவன் பேசுகையில் இந்த நிலையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க இருப்பதாகவும் கூறினார். மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு எதிரில் அனைத்து கட்சிகளுடன் போராட்டம் நடத்த போவதாக கூறினார்.

****

Recent Posts