தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் நங்கநல்லூர் கிளையின் சிறப்பு மாதாந்திர கூட்டம்


சென்னை, மார்ச் 12, 2022: தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்கம் நங்கநல்லூர் கிளையின் சிறப்பு மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மடிப்பாக்கம் லஷ்மி கோவிந்த ராஜன் அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. 

Youtube Video👇👇 (Best view in full screen)

இக்கூட்டம் தலைவர் இரா.ஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்றது. அவருடன் துணைத் தலைவர் இரா. தியாகராஜன், மாவட்டத் தலைவர் பி. ஏபெல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், இதர கிளை நிர்வாகிகள், தோழமைச் சங்க தோழர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.


முதலில் மறைந்த செயலாளர் திரு. சி.கே. கிருபாகரன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர். பிறகு மாவட்ட நிர்வாகிகள், இதர கிளை நிர்வாகிகள், தோழமைச் சங்க தோழர்கள், நண்பர்கள் அனைவரும் மறைந்த செயலாளர் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள்.

பின்னர் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருமதி வி. கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் என். இராமசாமி சிறப்புரையும்,  மாநிலச் செயலாளர் ம. நாதன் நிறைவுரையும், துணைத் தலைவர் ஆ. கந்தசாமி நன்றிவுரையும் செய்தனர்.

****

Recent Posts