சர்வதேச காது கேளாதோருக்கான தடகள போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கு பாராட்டு , ISDAC Launched


சென்னை, செப்டம்பர் 1, 2021: போலந்தில் நடைபெற்ற நான்காவது சர்வதேச காது கேளாதோருக்கான தடகள போட்டியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வீராங்கனைகள்.
தங்கமகள் ஷமீஹா பர்வீன் - மணிகண்டன் - சுதன் ஆகியோர்க்கு இன்று பிற்பகல் 1.00மணி அளவில் சென்னை சாந்தோம -ல் உள்ள தாஜ் பிசினஸ் ஹப்-ல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சமூக சேவர்கள் ம.முகமது கவுஸ் மற்றும் அன்சர் மீரான் ஏற்பாடு செய்திருந்தனர்.

Youtube Video👇👇


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் அவர்களும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு.பிரபாகரன் அவர்களும் பங்கேற்றனர்.

அப்போது ISDAC அமைப்பு துவங்கப்பட்டது. அதற்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்படார்.

மேலும் SYPA Tree நிறுவனர் முகமது சைபா தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு Sponsor செய்வதாக கூறினார். மற்றும் தாஜ் குரூப் இயக்குனர்  ஃபைசல் தாஜ் அவர்கள் குரூப் நிறுவனமாகிய KFC-ல் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறினார்.

****


Recent Posts