கத்திப்பாரா ஜெனார்த்தனன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அரிசி வழங்குதல்


06 ஜூலை 2021 செவ்வாய் கிழமை 2021 அன்று காலை 08.30 மணியளவில் TEMOWA நிறுவன தலைவர் மாவீரன் ஐயா கத்திப்பாரா ஜெனார்த்தனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவீரன் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இலவசமாக 10 டன் அரிசி மூட்டைகள் வழங்குப்பட்டது.

Video👇👇

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் அண்ணன் திரு தா.மோ. அன்பரசன் அவர்கள் தலைவர் சிலைக்கு மரியாதையை செலுத்தி கத்திப்பாரா ஐயா இல்லத்தில் துவக்கிவைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் குறைந்தது 100 ஆதரவற்றோர் இல்லங்கள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியில் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அறக்கட்டளை தலைவரும் TEMOWA தலைவருமான திரு. கத்திப்பாரா ஜெ. விவேக், சங்கத்தின் மூத்த தலைவர்கள் திரு. சைதை M.S.மணி, திரு. K.ராஜசேகரன், திரு. ப.ரவி ராஜா, திரு. S.குணசேகரன், திரு. A.மணலி பாண்டியன், திரு. T.முகமது ஃபயாஸ், திரு. அத்திப்பட்டு M. கார்த்திகேயன், திரு. அமீர் பாய், திரு. ஊத்துக்கோட்டைா பரந்தாமன், திரு. A.V.மணி, திரு. இளம்புயல் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

****


Recent Posts