Joyful Life Health Care & Medical Foundation மற்றும் காவல்துறை சார்பாக கொரோனா இரண்டாம் அலை விழிப்புணர்வு பேரணி

சென்னை, ஏப்ரல் 24, 2021: ஜாய்ஃபுல் லைஃப் ஹெல்த் கேர் & மெடிக்கல் ஃபவுண்டேஷன் சார்பாக நிர்வாக இயக்குநர் நிர்மல் வில்லியம்ஸ் அவர்களின் தலைமையில் இன்று மாலை 4மணி முதல் 5 மணி வரை செவிலியர்களும், காவல் துறை நண்பர்களும் பங்குபெறும் கொரோனா இரண்டாம் அலை விழிப்புணர்வு பேரணி அண்ணாநகர் திருமங்கலம் வழியாக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM Hospital) மருத்துவமனை வரை நடைபெற்றது.

Video👇👇

இதற்கு முக்கிய விருந்தினர்களாக, உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரியின் முதல்வர் Dr.காஞ்சனா அவர்களும், அண்ணாநகர் திருமங்கலம் சரகம் துணை காவல் ஆணையர் திரு.சிவகுமார் அவர்களும், திருமங்கலம் காவல் ஆய்வாளர் திருமதி.லதா மகேஷ்வரிஅவர்களும் பங்குபெற்றார்கள்.  இவர்களோடு சேர்ந்து செவிலியர்களும், காவல் துறை அதிகாரிகளும், நண்பர்களும் கலந்துகொண்டனர். 

(L to R) Dr.காஞ்சனா, முதல்வர், உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி;  லதா மகேஷ்வரி, திருமங்கலம் காவல் ஆய்வாளர், பெருமாள், திருமங்கலம் துணைகாவல் ஆய்வாளர்; நிர்மல் வில்லியம்ஸ், நிர்வாக இயக்குநர், ஜாய்ஃபுல் லைஃப் ஹெல்த் கேர் & மெடிக்கல் ஃபவுண்டேஷன்

இந்த பேரணியில் கொரோனா முதல் அலைக்கும்,  இரண்டாம் அலைக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும், கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு மற்றும் அவசியத்தை பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

தொடர்புக்கு:

Nirmal Williams,
Managing Director,
Joyful Life Health Care & Medical Foundation,
#AP-669/1, 'H' BLOCK, 9TH STREET,
15TH MAIN ROAD,
NEAR THIRUMANGALAM,
ANNANAGAR WEST, CHENNAI - 600040
(Land Mark : Behind Thirumangalam Metro Station)
Mr.Stephen : Co-ordinator, +91 86101 57283

****

Recent Posts