ஐனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் செப் 27 நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து போராட்டம்


சென்னை, செப்டம்பர் 27, 2021:
பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்த நாள் வரை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை உயர் நீதிமன்றம் முன்பு இன்று  கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஆலோசனைக்குழு தலைவர் தோழர் எஸ். குமாரசாமி தலைமையில் ஐனநாயக வழக்கறிஞர் சங்கம் (DAA) சார்பில் போராட்டம் நடைபெற்றது. அவருடன் மாநில தலைவர் K.பாரதி; மாநில பொதுசெயலாளர் K.சுரேஷ்; மாநில துணைத்தலைவர்கள் ரமேஷ்,விஜய்; மாநில பொருளாளர் சங்கர்; மாநில துணை பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Youtube Video👇👇


அப்போது அவர் விடுத்த கோரிக்கைகள்:

1) சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வேண்டும்

2) தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும்

3) தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும், உரிய பாதுகாப்புடன் நேரடி விசாரணை உடனே துவங்க வேண்டும்

அப்படி இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் விரோத, தேச விரோத மோடி அரசே பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai