Udhayanidhi Stalin Distributes Covid Relief to Journalists

சென்னை, ஜூன் 1, 2021: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில், தனி மனித இடைவெளி, கட்டாய  முகக்கவசம் என  பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து மிக எளிய முறையில் இன்று  01-06-2021 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் மற்றும் பாதுகாப்புப் பொருட்களை வழங்கினார். நன்கொடையாளர்கள் திரு.த.மணிவண்ணன் மற்றும் யூத்திங்க் திரு.அப்துல்கனிஆகியோர் உடன் பங்கேற்கின்றனர்.

Video👇👇

கோயம்பேடு வணிகரும் தமிழ்ப் பற்றாளருமான த.மணிவண்ணன் தனது தந்தையின் பெயரால் நடத்தப்படும் ‘தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை’ மூலம் 5 கிலோஅரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ கோதுமை, 1 கிலோ ரவை, 1 கிலோ மைதா, 1 கிலோ சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்ட  250 எண்ணிக்கையிலான தொகுப்பு வழங்கப்பட்டது.

லோகா பவுண்டேஷன் சார்பில் யூத்திங்க் அமைப்பு 1000 எண்ணிக்கையில் 1 நீராவி பிடிக்க உதவும் கருவி, முகக்கவசம், மல்ட்டி விட்டமின் மாத்திரைகளின்  தொகுப்பு, கபசுர குடிநீர், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட்டது.

பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றம்   இணைச்செயலாளர் பாரதிதமிழன் நன்கொடையாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறி பாராட்டினார்.

அன்பு காட்டுவோம் அரவணைப்போம்.. ஒற்றுமையாய் இந்த கொரோனா நெருக்கடியைக் கடப்போம்! 

****

Popular posts from this blog

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

Chennai Airport to Observe Yatri Suvidha Diwas; Showcases 12 Years of Aviation Transformation and Passenger-Centric Growth

Star Health Marks 20 Years of Trust and Care; Settles 2.5 Lakh+ Claims Worth ₹1,606 Crore in Tamil Nadu

Future-Ready Education Must Go Beyond Academics, Says TACS President