டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்



சென்னை: மருத்துவ உலகில் தினம் தினம் புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து, அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். மக்களில் சிலரும் நோய் பாதிப்புகளில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் இருந்து செயல்பட்டுவரும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் சென்டரும், அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சியில் புகழ் பெற்ற நிறுவனமான ஜியோஸ்டார் நிறுவனமும் இணைந்து ஸ்டெம் செல் சிகிச்சை முறையை அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் டி.காமராஜ் கூறியதாவது:

நோய்கள் மற்றும் உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டெம் செல்களை பயன்படுத்தும் ஒரு மருத்துவ முறை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகும். இந்த செல்கள் ரத்த அணுக்கள், மூளை செல்கள் மற்றும் தசை செல்கள் போன்ற உடலில் உள்ள பல்வேறு வகையான செல்களாக உருவாகும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன.
 
நோயாளியின் உடலில் இந்த சிறப்பு செல்களை செலுத்துவதன் மூலம் சேதம் அடைந்த அல்லது நோயுற்ற திசுக்களை ஆரோக்கியமாக மாற்ற முடியும். இதற்காக மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிக்கலான அறுவை சிகிச்சையும் தேவைப்படாது.

இதய நோய், நீரிழிவு, மூட்டுவலி,முதுகுத் தண்டுவட காயங்கள், ஆண்மைக்குறைவு, விந்தணு உற்பத்தி பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

ஸ்டெம் செல் சிகிச்சையானது மற்ற அனைத்து வகையான சிகிச்சை வாய்ப்புகளும் திருப்திகரமாக இல்லாதபோது  மாற்று அணுகுமுறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  விரைவில் நலம் பெறவும் உதவுகிறது.

ஸ்டெம் செல் தெரபி என்பது ஒரு புரட்சிகரமான மருத்துவ சிகிச்சையாகும். இது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறது. ஸ்டெம் செல் சிகிச்சையின் முதன்மையான நன்மை என்னவென்றால், இது குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்த உதவுகிறது. இது பாரம்பரிய சிகிச்சையை விட வேகமாக மீட்க உதவுகிறது.

கீல்வாதம், நரம்பியல் மற்றும் முதுகுவலி போன்ற நிலைகளால் ஏற்படும் நாள்பட்ட வலியைக் குறைக்கும் திறன் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு உண்டு. சேதமடைந்த திசுக்களை மீளுருவாக்கம் (ரீ ஜெனரேஷன்) செய்வதன் மூலம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம், ஸ்டெம் செல்கள் அசௌகரியத்தை நீக்கி, நோயாளிகளின் இயக்கத்தை மீட்டெடுக்க முடியும்.

ஸ்டெம் செல் சிகிச்சை என்பது ஒரு வகை மீளுருவாக்கம் செய்யும் மருத்துவமுறை ஆகும்.

ஸ்டெம் செல் சிகிச்சையைச் செய்வதற்கான ஒரு பொதுவான முறை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஆகும். இந்த நடைமுறையில், ஸ்டெம் செல்கள் நோயாளியின் சொந்த எலும்பு மஜ்ஜையிலிருந்து அல்லது ஒரு நன்கொடையாளரின் எலும்பு மஜ்ஜையிலிருந்து அறுவடை செய்யப்பட்டு பின்னர் ஒரு நரம்பு வழியாக ரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுகிறது. உடலுக்குள் நுழைந்தவுடன் இந்த ஸ்டெம் செல்கள் பல்வேறு திசுக்களுக்கு பயணிக்க முடியும். அங்கு அவை சேதத்தை சரிசெய்ய சிறப்பு செல்களாக வேறுபடு கின்றன.

ஸ்டெம் செல் சிகிச்சையைச் செய்வதற்கான மற்றொரு வழி, கொழுப்பு - பெறப்பட்ட ஸ்டெம் செல்களை (கிஞிஷிசிs) பயன்படுத்துவதாகும். இந்த வகையான ஸ்டெம் செல்கள் கொழுப்பு திசுக்களில் இருந்து லிபோசக்க்ஷன் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு, நோயாளியின் உடலில் மீண்டும் செலுத்தப்படுகிறது.

கட்டுப்படுத்த முடியாத முடி கொட்டுதல், சர்க்கரை நோய், நாள்பட்ட ஆறாத புண், குடல் அழற்சி, புற்றுநோய், குழந்தையின்மை, விந்தணு உற்பத்தி குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு உட்பட பலவிதமான பாதிப்புகளுக்கு விரைவான சிறப்பான சிகிச்சை கிடைக்கும்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக பிரத்யேகமான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை முறையை டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் மையம், அமெரிக்காவைச் சேர்ந்த ஜியோஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.

ஸ்டெம் செல் சிகிச்சை மையத்தின் துவக்க விழா 04.09.2023 அன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் டாக்டர் காமராஜ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
 
தெலுங்கானா மாநில ஆளுநரும், பாண்டிச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான மாண்புமிகு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்டெம் செல் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இவ்வாறு டாக்டர் டி.காமராஜ் கூறினார்.

ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறியதாவது:

குழந்தையின்மை சிகிச்சையில் ஸ்டெம் செல் தெரபிக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. குழந்தையில்லாமல் அவதிப்படும் தம்பதியர் வாடகத்தாயை நியமிப்பதில் பல சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குழந்தைப்பேறு எளிது. இவ்வாறு டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறினார்.

எலும்பியல் நிபுணர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், விளையாட்டு காயங்கள், எலும்பு முறிவு எளிதில் குணமாக்க ஸ்டெம்செல்தெரபி உதவும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக ஸ்டெம் செல் சிகிச்சை முறை செயல்படுகிறது என்றார்.

டாக்டர் நிவேதிதா, ஜியோஸ்டார்- யு,எஸ்.ஏ. நிறுவன பிரதிநிதி டாக்டர் திலிப்குமார் ஆகியோர் பேசினர்.

Popular posts from this blog

Penang Roadshow to India 2026: Boosting Business Events & Tourism Momentum for Visit Malaysia 2026

Godrej Enterprises Group Expands Security Solutions Footprint in Chennai with New Exclusive Store

'Rag Rekha’ Art Exhibition Inaugurated in Chennai, Celebrating the Confluence of Music & Visual Art

District-Level Viksit Bharat Youth Parliament Competition 2026 Fosters Democratic Spirit at Mar Gregories College of Arts & Science, Mogappair West

MGM Healthcare Malar Performs Live Liver Transplant on Child for Genetic disorder; Ends Need for Dialysis