17 லட்சம் கொடுத்து ஏமாற்றப்பட்ட கலைஞர் நூலகம் தமிழ் ஆசிரியருக்கு போலீஸ் ஸ்டேஷனில் சித்திரவதை?முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார்

சென்னை, செப்டம்பர் 20, 2025: வீட்டு ஒத்திக்கு கொடுத்த பணம் ரூ.17 லட்சத்தை மீட்டுத்தர வேண்டி சம்பந்தமாக, சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் சி. வெற்றிவேல், இன்று செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அவர் கூறியதாவது,  “நான் மதுரையில் எம்.ஏ., பி.எட்., எம்.பில் படித்து, தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் ஆழ்ந்த ஆர்வமுடையவனாக வளர்ந்தேன். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களை பல்வேறு மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன். 33 ஆண்டுகளாக அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றேன். என் வீட்டில் ‘கலைஞர் நூலகம்’ எனும் பெயரில் சுமார் 30,000 புத்தகங்களை கொண்ட ஒரு தனிப்பட்ட நூலகத்தை நடத்தி வந்தேன்.”

17 லட்சம் கொடுத்து ஏமாற்றப்பட்ட  கலைஞர் நூலகம் தமிழ் ஆசிரியருக்கு போலீஸ் ஸ்டேஷனில் சித்திரவதை?முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார்
ஏமாற்றப்பட்ட ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் சி. வெற்றிவேல்

“வீடு வாங்க இயலாத நிலையில், ரூ.17 லட்சம் செலவில் இரண்டு படுக்கையறை வீடு ஒன்றை ஒத்திகையாகப் பெற்றேன். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் வங்கிக்கடனை தவிர்த்ததால், வீடு வங்கியால் கைப்பற்றப்பட்டது. எனது பணமும் திரும்ப பெற முடியாமல் போனது. மேலும், போலீசாரிடம் புகார் அளித்தபோது, அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் காவல் நிலையங்களில் போலீசார் என்னை தவறாக நடத்தினர், தாக்கினர். இது எனக்கு மிகுந்த அவமதிப்பாக அமைந்தது.”

Press meet Youtube Video link 👇 

“இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம், மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் அலுவலகம், நீதிமன்றம், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புகார் அளித்துள்ளேன். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”

“வீட்டு உரிமையாளர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது ரூ.17 லட்சம் தொகையை மீட்டுத் தர வேண்டும். போலீசாரின் நடத்தை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். முதலமைச்சர் தலையிட்டு நியாயம் செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை.”

தொடர்பு:
சி. வெற்றிவேல், எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்
மொபைல்: 98401 31457

****

Popular posts from this blog

மக்கள் படை கட்சியின் 2026 சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பொதுச் செயலாளர் ராம்பிரகாஷ் அறிவிப்பு

THANC Hospital Opens 'Chennai Breast Centre' | Focuses on Women's Health & Breast Cancer Awareness

Free Artificial Limbs & Calipers Distributed to Amputees by Shree Geeta Bhavan Trust & Mukti:M.S.Dadha Foundation

B.S. Abdur Rahman Crescent Institute & Royal Institution of Chartered Surveyors (RICS) Launches Centre of Excellence for Built Environment and Executive Leadership Programme

Women Now Hold 20% of Leadership Roles: 2025 Avtar & Seramount BCWI, MICI, BCESG Study Finds