பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியிட்டு விழா


சென்னை: நவம்பர் 14 சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களுக்காக, எழுதிய 14 கதை தொகுப்புகள், பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தாரால்  நவம்பர்16 ம்  தேதி சக்தி குழுமத்தின் சங்கமத்தில் வெளியிடப்பட்டது. 

"மைத்ரிம் பஜத "..  உலக ஒற்றுமைக்காக எழுதிய இறை வணக்க பாடலை இறை வணக்க பாடலை சக்தி குடும்பத்தின் தலைவர் உமா வெங்கட்  மற்றும் சீதா கணேசன் பாடி நிகழ்ச்சியை இனிதே துவங்கி வைத்தனர். பிறகு திருமதி. சீதா கணேசன், தனது அறிமுக உரையில், பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் சமூக நலத்திட்டங்கள் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.

பேக்கிடேர்ம் டேல்ஸ்  இயக்குனர் உமா அபர்ணா
தலைமை தாங்கிய திருமதி பாமதி IAS, திருமதி வேதா கோபாலன் எழுத்தாளர், திருமதி. ஜெயந்தி நாகராஜன் ஆகியோர் எழுத்தின் வலிமையை உணர்த்தியது மட்டுமின்றி, வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தி பேசினார்கள். ஊன்று கோல் தேவைப்படுமா என்று எழுத்தாளர்கள் எனும் காலத்தில், அவர்களுக்கு எழுதுகோல் கொடுத்து ஊக்குவித்த பேக்கிடெர்ம் நிலைய நிறுவனர் செல்வி லட்சுமி பிரியாவின் முயற்சி, இமாலய வெற்றி என்றும் குறிப்பிட்டனர்.

Youtube video link 👇 
24 எழுத்தாளர்கள் சில குழுக்களாக இணைந்து இந்த படைப்புகளை குறிகிய காலத்தில், பேக்கிடேர்ம் டேல்ஸ்  இயக்குனர் உமா அபர்ணாவுடன் உருவாக்கியது ஒரு சாதனை.

இவர்கள் படைப்புகளான:

படைப்புகள் 1: கதம்பவனம், ஆத்திச்சூடி கதைகள், சுட்டும் விழிச்சுடரே, இப்படிக்கு 

(மேல் வரிசை) வனஜா முத்துக் கிருஷ்ணன், ருக்மணி வெங்கட்ராமன், உஷா  கண்ணன் (நடு வரிசை) உமா ஸ்வாமிநாதன், ராஜேஸ்வரி ஐயர் (கீழ் வரிசை) சுஜாதா கணேஷ், ஜெயந்தி பத்ரி, பத்மா ராகவன்,

படைப்புகள் 2: தொடுவானம், வாக்கினிலே இனிமை வேண்டும், நலம் நலமறிய ஆவல்

(மேல் வரிசை) மேல்மங்கலம். வி. சியாமளா, சுபஶ்ரீ ரவிச்சந்திரன், வசந்தி ஜெனார்த்தனன்,(கீழ் வரிசை) மாதங்கி சுரேஷ், பிரபாவதி கிரி, காயத்ரி, பார்வதி நாகமணி

படைப்புகள் 3: குறை ஒன்றும் இல்லை
(மேல் வரிசை) மகாலட்சுமி, சாவித்ரி ராஜேஷ்,ரமா சீனிவாசன், உஷா மாரியப்பன், (கீழ் வரிசை) மேல் மங்கலம் வி.சியாமளா, ஆர். பிருந்தா, சரோஜா நாராயணன், அருணாஜெகதீஷ்

படைப்புகள் 4: பட்டாம்பூச்சி தேவதைகள்


படைப்புகள் 5: குணமது கைவிடேல் 
படைப்புகள் 6: சரணாகதி
கீதா வீரராகவன்; கல்பனா லஷ்மி நரசிம்மன்; சரண்யா முரளி 

படைப்புகள் 7: இளைய பாரதம் (உமா வெங்கட்) கண்ணாடி, ஜம்போவும் சுமோவும் (உமா அபர்ணா)ரூபி- அன்புள்ள பத்மனி- அன்புள்ள

ஆகிய புத்தகங்கள் ‌வெளியிடப்பட்டன.  இந்த புத்தகங்கள் அநேக நல்ல கருத்தை வலியுறுத்தி இருக்கின்றன.

கதைகள் மூலமாக சிறந்த அறிவுரைகள், கருத்துக்கள், நீதிகள், குழந்தைகளை சென்று அடையவேண்டும் என்ற பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் முயற்சி பாராட்டத்  தக்கது.

"உயிர்களிடத்தில் அன்பு வேணும்; தெய்வம் -உண்மையென்று தானறிதல் வேணும்; வயிர முடைய நெஞ்சு வேணும் -இது வாழும் முறைமையடி பாப்பா " என்று முண்டாசு கவி பாரதி சொன்னது போல், குழந்தைகளுக்கு வாழும் நெறி முறையை வலியுறுத்தி எழுதப்பட்ட கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம்..

"கனவு மெய் பட வேண்டும் " என்று ஆசைப்பட்ட டாக்டர் கலாம் அவர்களின் கனவை முடிந்த வரை நனவாக்க, நினைத்த பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

புத்தகங்கள் வெளியிடுவது அல்லாமல், அநேகரை சென்று அடைய வேண்டும் என்ற வேண்டுகோளுடன், உமா அபர்ணா நன்றி கூற, விழா இனிதே முடிவடைந்தது.

****

Popular posts from this blog

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

Chennai Airport to Observe Yatri Suvidha Diwas; Showcases 12 Years of Aviation Transformation and Passenger-Centric Growth

Star Health Marks 20 Years of Trust and Care; Settles 2.5 Lakh+ Claims Worth ₹1,606 Crore in Tamil Nadu