தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் 60வது ஆண்டின் தருணத்தில் KKV60 பசுமை விருதுகள் அறிமுகவிழா


  • இன்றைய செய்தி நாளைய வரலாறு

சென்னை, ஜூலை 16, 2021: தற்சமயம் இந்திய பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும், சர்வதேச வணிகத்தில் ஒரு ஒரு தனி இடம், அந்நிய செலாவணி ஈட்டுதல், பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தன்னை சரி செய்து வருவாய் ஈட்டுதல் போன்ற பொருளாதார மேம்பாடு செயல்பாடுகளிலும், ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பினை நேரடியாகவும், லட்சக்கணக்காணோருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் ஒரு சூரியணாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் KKV Agro Powers LTD, The Chennai Silks, Sree Kumaran Thangkamaligai, SCM Textiles and Spinning, Teenage Precasting Builders குழுமங்களின் தாய் நிறுவனம் ஒரு சிறிய கதர் கடையாக 257 சதுர அடி அளவில் காமராஜர் சாலை, மதுரையில் துவங்கியது என்றால் இன்று விண்ணுயர ஓங்கி வளர்ந்து இந்தியாவின் ஒரு முதல் தலைமுறை நிறுவன அடையாளமாக இருக்கும் கஸ்துரிபாய் காதி வஸ்திராலயம் எனும் குழுமங்களின் ஒவ்வொரு அணுக்களிலும் அயராத உழைப்பு, தரம், நேர்மை ஆகியவை தான் காரணம்.

Video 👇👇

இன்று 60ஆண்டுகளை தொட்டு நிற்கும் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆபரண சாம்ராஜ்யம் 500 சதுர அடிகள் கொண்ட ஒரு சிறிய வாடகை கட்டிடத்தில் கஸ்தூரி பாய் காதி வஸ்திராலயம் என்ற பெயரில் நிறுவனர் தெய்வத்திரு. குழந்தை வேல் முதலியார் அவர்களால் 3/8/1962 ஆடிபெருக்கு அன்று துவங்கப்பட்டது.

தெய்வத்திரு.குழந்தை வேல் முதலியார் சுதந்திர போராட்ட வீரராக ரத்தம் சிந்தி இந்திய சுதந்திரம் அடைய ஒரு பங்கேற்பாளராக இருந்தவர், பிற்காலத்தில் வியர்வை சிந்தி மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யம் உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தார்.

வரும் 2022 ம் ஆண்டில் 60 ம் ஆண்டில் வெற்றிச்சுவட்டை எடுத்து வைக்கும் தருணத்தில் எங்களது KKV Agro Powers LTD குழுமங்களின் சார்பில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும், மனித வளம், அறிவு சார்வளர்ச்சியிலும் மிக முக்கிய பங்காற்றி வரும் கீழ்கண்ட துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு லட்சம் மதிப்பிலான விருதுகளை திட்டமிட்டு வழங்கவிருக்கிறோம். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் சாதித்துள்ள சாதனையாளர்களை அறிவு சார் உலகில் அறிமுகப்படுத்துவதிலும், அடையாளப்படுத்துவதிலும் KKV Agro Powers LTD மிக்க பெருமை கொள்கிறது. தகுந்த வல்லுநர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபெற உள்ளது.

1)மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கைகளின் படி வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்திய பொருளாதாரத்தின் முக்கிய இடத்தினை பிடித்துள்ள கைத்தறி நெசவிலும், ஆடைகள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பிலும் சாதித்த சாதனை கலைஞர்கள். இருலட்சம் அமொரிக்க டாலர் மதிப்பில் 1 விவாகாசேலை "VIVAGAA" Guinness Books of Record - நல்ல முன் உதாரணம்

2)இயற்கை வேளாண்மையில் தன்னிறைவு படைத்து பாரம்பரிய பயிர்கள் மற்றும் ஆரோக்கிய உலகின் வழிகாட்டிகளாக திகழ்ந்து சாதித்து வரும் இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் வேளாண் சாதனையாளர்கள்

3)பாரம்பரிய கலைகள், இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களாக திகழ்ந்து வரும் இள வயது கலைஞர்கள், அறிவியல் முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்தி இந்தியாவினை தகவல் தொழில்நுட்பம், பொறியியல், விஞ்ஞானம், அறிவியல் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அறிவியலில் சாதித்துள்ள இளம் விஞ்ஞானிகள் மேற்கண்ட விருதுகளை வழங்கி மண்ணுக்குள் வைரமாக இருக்கும் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் திரு.மயில்சாமி அண்ணாதுரை, திரு.லெனின், திரு.பாவா செல்லத்துரை அவர்களால் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி மிளிரும் விலை மதிக்க முடியாத ரத்தினங்களாக மாற்றி இந்தியதேசத்தின் மதிப்புமிகு மனிதர்களாக மாற்றவுள்ளோம்.


****

Recent Posts