மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி


சென்னை, பிப்ரவரி 28, 2022: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மாநில மையத்தின் சார்பில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. 

Youtube Video👇👇
மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். மாநில துணைத் தலைவர் த. குப்பன் அனைவரையும் வரவேற்றார். அனைத்து மாவட்டத்தின் பிரதிநிதிகளும் கருத்துரையாற்றினர். 

(L to R) மாநில செயலாளர் எஸ்.ஆறுமுகம்; மாநில பொருளாளர் ந.ஜெயசந்திரன்; மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன்; பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி; மாநில துணைத்தலைவர் கி.இளமாறன்

இறுதியில் கீழ்க்காணும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

  • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் அரசு மருத்துவ மனைகள் இணைக்கப்பட வேண்டும்.
  • உண்மையான பணமில்லா மருத்துவமாக, இத்திட்டம் நடத்தப்பட வேண்டும்.
  • மூன்றாம் தரப்பு, இத்திட்டத்தில் ஈடுபடக்கூடாது.
  • இத்திட்டத்தில் இணையும் உரிமை, இணையாமலிருக்கும் உரிமை, ஓய்வூதியருக்கு வழங்கப்பட வேண்டும்.
  • முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள நடைமுறைகள் இணைக்கப்பட வேண்டும்.
  • அதிகாரம் பெற்ற குழுவில் உள்ள அதிகாரிகளின் பரிந்துரைகளை காப்பீட்டு நிறுவனம் நிராகரிக்கக் கூடாது.
  • சத்துணவு, அங்கன்வாடி போன்ற சிறப்பு ஓய்வூதியர்கள் இத்திட்டத்தில் இலவசமாக இணைக்கப்பட வேண்டும்.
  • இரண்டாண்டுகளாக, காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பட்டியல்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கை 24.03.2022-ல் நடைபெறும் மாநில செயற்குழுவில் அறிவிக்கப்படும். இறுதியாக மாநில செயலாளர் குரு. சந்திரசேகரன் நன்றி கூறினார்.

****

Popular posts from this blog

District-Level Viksit Bharat Youth Parliament Competition 2026 Fosters Democratic Spirit at Mar Gregories College of Arts & Science, Mogappair West

'Rag Rekha’ Art Exhibition Inaugurated in Chennai, Celebrating the Confluence of Music & Visual Art

Golden Memories Rekindled as St. Bede’s 1976 Batch Reunites After 50 Years

Godrej Enterprises Group Expands Security Solutions Footprint in Chennai with New Exclusive Store

UATT 2.0 அரசாணைகள் ரத்து செய்யக் கோரி தோட்டக்கலை அலுவலர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்