சென்னை, ஜூன் 11, 2021: கொரோனோ ஊரடங்கில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2020ம் ஆண்டில் இருந்து சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் உணவின்றி தவிக்கும் மக்களும் உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருக்கிறார்கள்.
Video:
அதன் ஒரு தொடர்ச்சியாக இன்று சென்னை ஈக்காட்டுதாங்கள் அம்பேத்கார் நகரில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் வழங்கினார்.
பொதுமக்கள் சமூக இடைவெளி பின் பற்றி வாங்கி சென்றனர். இவர்களுடன் மற்ற தொண்டு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
****
